பள்ளிகளில் காஃபி அருந்த தென்கொரியாவில் தடை
பள்ளிகளில் காஃபி அருந்த தென்கொரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கொரிய பள்ளிகளில் காஃபி விற்பனைக்கு அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. தென்கொரியாவில் ஏற்கனவே, அதிக அளவு காஃபைன் கொண்ட காஃபி விற்பனை செய்யப்படுவதற்கு ஏற்கனவே கடந்த 2013-ஆம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது. தானியங்கி இயந்திரங்களில் ஆசிரியர் பயன்பாட்டுக்காக அந்த வகை காஃபி கிடைத்தது.
எனினும், அதனை மாணவர்கள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். எனவே, மாணவர்களுக்கு அதிக காபைன் கொண்ட காஃபி கிடைப்பதற்கான வாய்ப்பை தவிர்ப்பதற்காக அடுத்த மாதம் 14- ஆம் தேதி முதல் அந்த வகை காபியை பள்ளிகளில் விற்பனை செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story