எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு - 12 பேர் உயிரிழப்பு
எத்தியோப்பியாவில் நிகழ்ந்த பயங்கர நிலச்சரிவில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர்.
ஆடிஸ் அபாபா,
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தென் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
எஸ்.என்.என்.பி மாகாணத்தில் தாவ்ரோ மண்டலத்தில் 3 வீடுகள் தரை மட்டமாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 10 பேரது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. எஞ்சிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு எத்தியோப்பிய தலைநகர் ஆடிஸ் அபாபாவில் மலை போன்ற குப்பைக்கிடங்கில் நிலச்சரிவு ஏற்பட்டபோது 115 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் தென் பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக அங்கு பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது.
எஸ்.என்.என்.பி மாகாணத்தில் தாவ்ரோ மண்டலத்தில் 3 வீடுகள் தரை மட்டமாகின. இதில் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 10 பேரது உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. எஞ்சிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு எத்தியோப்பிய தலைநகர் ஆடிஸ் அபாபாவில் மலை போன்ற குப்பைக்கிடங்கில் நிலச்சரிவு ஏற்பட்டபோது 115 பேர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Related Tags :
Next Story