அமெரிக்காவை பாதுகாக்க டிரம்பின் மோசமான திட்டங்கள் நடைபெறாமல் இருக்க அரசு அதிகாரிகள் தீவிரமுயற்சி


அமெரிக்காவை பாதுகாக்க டிரம்பின் மோசமான திட்டங்கள் நடைபெறாமல் இருக்க அரசு அதிகாரிகள் தீவிரமுயற்சி
x
தினத்தந்தி 6 Sep 2018 6:23 AM GMT (Updated: 6 Sep 2018 6:36 AM GMT)

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மோசமான நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்காவை பாதுகாக்க ஜனாதிபதி திட்டங்கள் பல நடைபெறாமல் இருக்க அரசு அதிகாரிகள் பணியாற்றி வருவதாக டிரம்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


வாஷிங்டன்

 நியூ யார்க் டைம்ஸ் தலையங்கத்தில்  அதிபர் டிரம்ப்பின் "இரக்கமற்ற தன்மை" மற்றும் "தொலைநோக்கில்லாத செயல்பாடு" ஆகியவை தவறான தகவல்களுக்கும், பொறுப்பற்ற முடிவுகளுக்கும் வழிவகுத்துள்ளன  என்று கூறபட்டு உள்ளது.

அமெரிக்காவை அதிபரிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, அதிபர் டிரம்ப் கையெழுத்திடுவதற்கு முன்னால், முக்கிய ஆவணங்களை அவருடைய மேசையில் இருந்து நீக்கிவிடுவது உள்ளிட்ட "நிர்வாக ஆட்சி சதி"-யில் டிரம்பின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை குறிப்பிடுவதாக இந்தப் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ள  இந்த கட்டுரையை வெளியிட்டுள்ளதில் மிகவும் பெருமைப்படுவதாக கூறி டைம்ஸ் செய்தி நிறுவனம் இந்த தலையங்கத்தை நியாயப்படுத்தியுள்ளது.

பெயர் குறிப்பிடாமல் இந்த கட்டுரையை எழுதியிருந்தவரை தைரியமில்லாதவர் என்றும், இந்த செய்தித்தாளை போலியானது என்று டிரம்ப் குறிப்பிட்ட்டார். பெயரின்றி எழுதியிருக்கும் இந்த மர்ம எழுத்தாளர் கோழை என்று தெரிவித்திருக்கும் அதிபர் டிரம்பின் செய்தி தொடர்பு செயலர், இதனை எழுதியர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

Next Story