பூச்சிகளின் சத்தம் குறித்துப் புகார்!
பாரீஸ் புறநகர்ப் பகுதியில் பூச்சிகளின் சத்தம் குறித்து மேயரிடம் சுற்றுலாப் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிக அழகிய நகரங்களில் ஒன்றான பாரீஸ் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். அவ்வாறு பாரீசின் புறநகர்ப் பகுதிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், மேயரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளனர்.
அந்தப் புகாரில், அப்பகுதியில் சுற்றித்திரியும் குறிப்பிட்ட வண்டு இன பூச்சிகள் அதிகம் சத்தமிடுவதால் தொந்தரவாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
வண்டுகள் காலையிலும், மாலையிலும் தொடர்ந்து சத்தமிட்டுத் தொந்தரவு செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வானொலி மூலம் பதிலளித்த அப்பகுதி மேயர் ஜியார்ஜஸ் பெர்ரேரோ, இந்த சத்தம் புதிதாக வந்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தொந்தரவாக இருக்கலாம், ஆனால் இது இப்பகுதி மக்களின் சங்கீதம் என அவர்கள் உணரவில்லை என்றார்.
மேலும், சுற்றுலாப் பயணிகள் சில பூச்சிமருந்துகளைக் கொண்டு அவற்றை அகற்ற முயற்சிப்பதாகவும், அது மிகவும் மடத்தனமான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சத்தத்தை புதிதாக இங்கு வருபவர்கள் எதிர்த்தாலும் பரவாயில்லை. ஆனால் பிரான்சின் பூர்வீக குடிமக்களும் இதை தொந்தரவாக எண்ணுகிறார்கள் என மேயர் மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இன்றைய மனிதர்களுக்கு எல்லாமே தொந்தரவுதான்!
அந்தப் புகாரில், அப்பகுதியில் சுற்றித்திரியும் குறிப்பிட்ட வண்டு இன பூச்சிகள் அதிகம் சத்தமிடுவதால் தொந்தரவாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
வண்டுகள் காலையிலும், மாலையிலும் தொடர்ந்து சத்தமிட்டுத் தொந்தரவு செய்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வானொலி மூலம் பதிலளித்த அப்பகுதி மேயர் ஜியார்ஜஸ் பெர்ரேரோ, இந்த சத்தம் புதிதாக வந்த சுற்றுலாப் பயணிகளுக்குத் தொந்தரவாக இருக்கலாம், ஆனால் இது இப்பகுதி மக்களின் சங்கீதம் என அவர்கள் உணரவில்லை என்றார்.
மேலும், சுற்றுலாப் பயணிகள் சில பூச்சிமருந்துகளைக் கொண்டு அவற்றை அகற்ற முயற்சிப்பதாகவும், அது மிகவும் மடத்தனமான விஷயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சத்தத்தை புதிதாக இங்கு வருபவர்கள் எதிர்த்தாலும் பரவாயில்லை. ஆனால் பிரான்சின் பூர்வீக குடிமக்களும் இதை தொந்தரவாக எண்ணுகிறார்கள் என மேயர் மனவருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இன்றைய மனிதர்களுக்கு எல்லாமே தொந்தரவுதான்!
Related Tags :
Next Story