தனது முதல் உரையிலேயே காஷ்மீர் பிரச்சினையை இழுத்த பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி


தனது முதல் உரையிலேயே காஷ்மீர் பிரச்சினையை இழுத்த பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி
x
தினத்தந்தி 18 Sep 2018 4:44 AM GMT (Updated: 18 Sep 2018 4:44 AM GMT)

ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதல் முறையாக நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசிய ஆரிப் அல்வி, காஷ்மீர் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் புதிய அதிபராக அண்மையில் பதவியேற்ற ஆரிப் அல்வி அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் நேற்று முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: “இந்தியாவுடன் அமைதியான உறவைப் பேண பாகிஸ்தான் விரும்புகிறது. இது இருதரப்பும் விரும்பும் நடவடிக்கையாக இருக்க வேண்டும். 

காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தான் எப்போதும் துணை நிற்கும். காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு. காஷ்மீர் பிரச்னைக்கு ஐ.நா.வின் வழிகாட்டுதல்களின் படி அமைதியான தீர்வுகாண வேண்டும். ஒருவரை மற்றொருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக் கொள்வதால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே பிரச்சினைகளைத் தீர்த்து, நல்லுறவை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். அண்டை நாடுகளுடன் மட்டுமின்றி அனைத்து இஸ்லாமிய நாடுகளுடன் பாகிஸ்தான் நல்லுறவை விரும்புகிறது என்றார். 

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று இந்தியா கூறி வரும் நிலையில், பாகிஸ்தான் புதிய அதிபர், தனது முதல் உரையில் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்யண உரிமை உண்டு என்று பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story