ரஷியாவின் எஸ்-400 ரக ஏவுகணையை இந்தியா வாங்குவது பொருளாதார தடைக்கு வழிவகை செய்யும் - அமெரிக்கா


ரஷியாவின் எஸ்-400 ரக ஏவுகணையை இந்தியா வாங்குவது பொருளாதார தடைக்கு வழிவகை செய்யும் - அமெரிக்கா
x
தினத்தந்தி 21 Sep 2018 9:12 AM GMT (Updated: 21 Sep 2018 9:12 AM GMT)

ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவது பொருளாதார தடைக்கு வழிவகை செய்யலாம் என அமெரிக்கா கூறியுள்ளது.


வாஷிங்டன்,


400 கி.மீட்டர் தொலைவில் வரும் போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ஆளில்லாத குட்டி விமானங்களை வழிமறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ரஷியாவின் எஸ்.400 ரக அதிநவீன வான்வழி பாதுகாப்பு ஏவுகணைகளை இந்திய விமானப்படைக்கு கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ரஷ்யாவிடம் இருந்து அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க கடந்த சில ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏவுகணைகளை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. 

இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை என அமெரிக்கா மிரட்டி வருகிறது. டொனால்டு டிரம்ப் கொண்டுவந்த அமெரிக்காவின் எதிரிகளுக்கு பொருளாதார தடை மூலம் பதிலடி கொடுக்கும் சட்டத்தின் (சிஏஏடிஎஸ்ஏ) கீழ் ரஷ்யாவுக்கு சமீபத்தில் பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இவ்வரிசையில் சீனாவும் இணைக்கப்பட்டுள்ளது. சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தின்படி வடகொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் மீதும் அமெரிக்கா தடையை கொண்டுவந்துள்ளது. இப்போது ரஷியாவிடம் இருந்து எஸ் 400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்குவதும் பொருளாதார தடைக்கு வழிவகை செய்யலாம் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். 
 

Next Story