கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய ஜோடிக்கு தண்டனை


கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை  கிழித்து குழந்தையை திருடிய ஜோடிக்கு தண்டனை
x
தினத்தந்தி 24 Sep 2018 6:27 AM GMT (Updated: 24 Sep 2018 6:27 AM GMT)

கர்ப்பிணி பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய ஜோடிக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது

நியூயார்க்:

அமெரிக்காவில் வடக்கு டகோடா பகுதியில் உள்ள ஒரு ஆற்றின் அருகே சவான்னா கிரேவின்ட் (22)  என்ற பெண்ணின் சடலம் கிடந்தது. அவரது வயிறு கிழிக்கப்பட்ட நிலையில் இருந்தது. பிணத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த புரூக் கிரவுஸ் என்ற பெண்ணும் அவரது காதலர் வில்லியம் கோயன் ஆகியோரும் சேர்ந்து அவரை கொலை செய்தது தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட சவான்னா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் தான் அவர் கொலை செய்யப்பட்டார். ஆனால் வயிற்றில் இருந்த குழந்தையின் நிலை என்ன ஆனது என தெரியாமல் இருந்தது.

ஆனால் இவர்கள் இருவரும் கர்ப்பிணியாக இருந்த சவான்னாவின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். ஆனால் அவருடைய காதலன் வில்லியம் கூறுகையில், அன்றைய தினம் நான் வீட்டிற்கு சென்ற போது, என்னுடைய காதலி பாத்ரூமில் ரத்தத்தை சுத்தம் செய்தார். திடீரென ஒரு குழந்தையை கொண்டு வந்து, இனிமேல் இது தான் நம்முடைய குடும்பம் என கூறியதாக தெரிவித்தார். மேலும், தன்னுடைய காதலி கொலை செய்ததே தனக்கு தெரியாது என பொய் வாக்குமூலம் கொடுத்தார்.

இந்த நிலையில் வில்லியம் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார், அங்கிருந்த கயிற்றினை கைப்பற்றி டிஎன்ஏ சோதனை மேற்கொண்டனர். அதில் கயிற்றை கொண்டு சவான்னா-வின் கழுத்தை வில்லியம்  நெரித்திருப்பது உறுதியாகியது.

 வயிற்றை கிழித்து குழந்தை வெளியில் எடுத்த குற்றம் தொடர்பாக,ஜாமீனில் வெளிவராதபடி  ஆயுள் தண்டனை கடந்த பிப்ரவரி மாதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story