புளோரிடாவில் யோகா கிளப்பில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி, பலர் படுகாயம்


புளோரிடாவில் யோகா கிளப்பில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி, பலர் படுகாயம்
x
தினத்தந்தி 3 Nov 2018 3:22 AM GMT (Updated: 3 Nov 2018 3:22 AM GMT)

புளோரிடாவில் யோகா கிளப்பில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர்.

டல்லாஹசே,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தலைநகரான டல்லாஹசேவில் யோகோ ஸ்டூடியோ ஒன்று செயல்பட்டு வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணியளவில் யோகா ஸ்டூடியோவிற்குள் நுழைந்த துப்பாக்கிய ஏந்திய நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டார். இந்த எதிர்பாராத துப்பாக்கிச்சூட்டில் 5 பேர்  படுகாயம் அடைந்தனர். பின்னர், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்து கொண்டார்.

துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார், குண்டு காயங்களுடன் கிடந்த 5 பேரையும் அருகாமையில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். இவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். தனி நபர் நடத்திய தாக்குதல் இது எனவும், இதற்கு பின்னணியில் சதிச்செயல் இருப்பதாக தெரியவில்லை என்றும் உள்ளூர் போலீசார் தெரிவித்தனர். 

Next Story