‘பிரிக்ஸிட்’ விவகாரத்தில் மோதல் - இங்கிலாந்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா


‘பிரிக்ஸிட்’ விவகாரத்தில் மோதல் - இங்கிலாந்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா
x
தினத்தந்தி 1 Dec 2018 10:00 PM GMT (Updated: 1 Dec 2018 9:48 PM GMT)

பிரிக்ஸிட் விவகாரத்தில் மோதல் தொடர்பாக, இங்கிலாந்தில் மேலும் ஒரு மந்திரி ராஜினாமா செய்தார்.

லண்டன்,

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் விவகாரத்தில் பிரதமர் தெரசா மேயுக்கும், அவரது கன்சர்வேடிவ் கட்சியினருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்த விவகாரத்தில் கடந்த மாதம் ஒரே நேரத்தில் டொமினிக் ராப், சைலேஷ் வாரா, சூயல்லா, எஸ்தர் மெக்வே ஆகிய 4 மந்திரிகள் பதவி விலகினார்கள்.

இந்த நிலையில் மேலும் ஒரு மந்திரி இப்போது பதவி விலகி உள்ளார். அவர் பல்கலைக்கழகங்கள் மற்றும் அறிவியல் துறைக்கான மந்திரி சாம் கியிமா ஆவார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து விலகும் நிலையில், கலிலியோ செயற்கை கோள் திட்டத்தின் கீழ் கூடுதல் பாதுகாப்பு வழங்க முடியாது என்று ஐரோப்பிய கூட்டமைப்பு கூறி விட்டது. இதை தெரசா மேயும் உறுதி செய்துள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துத்தான் இப்போது மந்திரி சாம் கியிம் பதவி விலகி உள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் விவகாரத்தில் தெரசா மே வரைவு திட்டம் வெளியிட்டதில் இருந்து பதவி விலகியுள்ள 7-வது மந்திரி சாம் கியிம் ஆவார்.


Next Story