இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்
இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது என பாகிஸ்தான் குற்றம்சாட்டி உள்ளது.
இஸ்லாமாபாத்
பாகிஸ்தானில் நடைபெற்ற தெற்காசியா ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தான் கொள்கை ஆய்வு நிறுவனம் (IPRI) நடத்திய முக்கிய சக்திகளின் பங்களிப்பு என்ற தலைப்பில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி தெஹ்மினா ஜன்ஜுவா பேசியதாவது:-
இஸ்லாமாபாத்தில் சார்க் பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய (SAARC) மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா மறுத்து விட்டது.
இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை இருதரப்பு உறவுகளை முன்னேற்றுவதற்கு உதவாது. மேலும் தெற்காசியா சமாதானம் அடைவதையும், முன்னேற்றத்தையும் தடுத்து நிறுத்துகிறது.
இந்தியா "வெறுப்புணர்ச்சியை உண்டாக்குகிறது" "டைனமிக் போட்டியை" நிலைநிறுத்துகிறது. நாங்கள் இப்பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக தொடர்ந்து முயற்சி செய்வோம் என்று நாங்கள் நம்புகிறோம்.
சமீபத்தில் நடைபெற்ற இந்திய-அமெரிக்க 2 + 2 பேச்சுவார்த்தை மூலம் மேம்பட்ட மற்றும் உணர்திறன்மிக்க அமெரிக்க இராணுவ வன்பொருள், தொழில்நுட்பம் மற்றும் ஆயுதம் ஆகியவற்றை இந்தியாவுக்கு வழங்குகிறது.
இது பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் சமநிலையை குறைந்து விடும்.
இத்தகைய ஒரு ஆயுத போட்டி, இப்பகுதியின் அமைதி மற்றும் உறுதிப்பாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாக பாகிஸ்தான் கவலை கொண்டுள்ளது.
இப்பிராந்தியத்தில் எந்தவொரு அணு ஆயுதம் அல்லது வழக்கமான ஆயுதப் போட்டியை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ளவில்லை என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story