அமெரிக்காவில் தீ விபத்து; விடுமுறையில் கிறிஸ்துமஸ் கொண்டாட சென்ற 3 இந்தியர்கள் பலி
விடுமுறையில் கிறிஸ்துமஸ் கொண்டாட அமெரிக்கா சென்ற தெலுங்கானாவை சேர்ந்த 3 இந்தியர்கள் தீ விபத்தில் பலியாகினர்.
வாஷிங்டன்,
தெலுங்கானாவை சேர்ந்த ஷரோன் (வயது 17), அவரது சகோதரர் ஜாய் (வயது 15) மற்றும் சகோதரி ஆரோன் (வயது 14) ஆகிய 3 சகோதர சகோதரிகள் விடுமுறையில் கிறிஸ்துமஸ் கொண்டாட அமெரிக்கா சென்றுள்ளனர். இவர்கள் அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தின் மிசனெரிகளாக உள்ள நாயக்கின் குடும்ப உறுப்பினர்கள்.
இவர்கள் விடுமுறைக்காக அமெரிக்காவில் உள்ள டென்னசி நகரின் மெம்பிஸ் பகுதியில் அமைந்த காரி கவுடிரீயட் என்ற பெண்ணின் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர்.
அவர் இந்த சிறுவர்களுக்கு விருந்தளித்து, வீட்டில் தங்க அனுமதித்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருந்தனர். இந்த நிலையில், விடுமுறையில் பொழுதுபோக்கிய அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி பலியாகி உள்ளனர். இதில் அந்த பெண்ணும் பலியானார்.
Related Tags :
Next Story