அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை


அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை
x
தினத்தந்தி 27 Dec 2018 7:31 AM GMT (Updated: 27 Dec 2018 7:31 AM GMT)

அமெரிக்காவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த போலீஸ் அதிகாரி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நியூயார்க், 

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், ரோனில் சிங் என்ற அதிகாரி கிறிஸ்துமஸ் நாள் இரவில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மர்ம நபர் அவரை  துப்பாக்கியால் சுட்டு உள்ளார். 

சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தபோது, ரோனில் சிங், குண்டு காயங்களுடன் உயிரிழந்து கிடந்து உள்ளார். மர்மநபர், போலீசார் வருவதற்கு முன்னரே தப்பிச் சென்று விட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரோனில் சிங்கிற்கு, மனைவியும், 5 மாத குழுந்தையும் உள்ளனர். 7 ஆண்டுகளாக போலீசில் பணிபுரிந்து வரும் அவர், பிஜி தீவில் இருந்து அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்துள்ளார். அவரது மறைவிற்கு மாகாண கவர்னர், போலீஸ் அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Next Story