உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 31 Dec 2018 10:00 PM GMT (Updated: 31 Dec 2018 8:51 PM GMT)

ரஷியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


* ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் உள்ள புகழ்பெற்ற தேவாலயத்துக்குள் துப்பாக்கி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவர் தன்னை பிரான்ஸ் ராணுவ வீரர் என கூறுகிறார். அதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

* சிங்கப்பூரில் புகையிலை பயன்படுத்துவதற்கான வயது வரம்பை 18-ல் இருந்து 19 ஆக உயர்த்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது. அங்கு இது இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

* ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்ட குற்றச்சாட்டு ரஷியாவை சேர்ந்த ஏராளமான பெண்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் குழந்தைகள் 30 பேர் விமானம் மூலம் ரஷியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

* ரஷியாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 28-ந் தேதி தலைநகர் மாஸ்கோவில் கைது செய்யப்பட்டது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

* ஆப்கானிஸ்தானில் நங்காஹர் மாகாணத்தில் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 28 பேர் கொன்று குவிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story