ரஷியாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி


ரஷியாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி
x
தினத்தந்தி 31 Dec 2018 10:15 PM GMT (Updated: 31 Dec 2018 8:59 PM GMT)

ரஷியாவில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் உயிரிழந்தனர்.

மாஸ்கோ,

ரஷியாவின் உரால் பிராந்தியத்துக்கு உட்பட்ட மக்னிடோகோரஸ்க் என்ற நகரத்தில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. நேற்று காலை இங்கு உள்ள ஒரு வீட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது.

இதில் கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இடிபாடுகளுக்குள் இருந்து 4 உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.

Next Story