சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 19 பேர் பலி


சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 19 பேர் பலி
x
தினத்தந்தி 13 Jan 2019 1:21 AM GMT (Updated: 13 Jan 2019 1:21 AM GMT)

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாகினர்.

சீனாவில் ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர்.  இந்த நிலையில் சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து அவர்கள் மீது விழுந்தது.  இந்த விபத்தில் 19 பேர் பலியாகினர்.

இதனை தொடர்ந்து 66 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர்.  2 பேர் இன்னும் மீட்கப்படவில்லை.  அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.  இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.

Next Story