சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 19 பேர் பலி
தினத்தந்தி 13 Jan 2019 1:21 AM GMT (Updated: 13 Jan 2019 1:21 AM GMT)
Text Sizeசீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாகினர்.
சீனாவில் ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் 87 தொழிலாளர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். இந்த நிலையில் சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென சரிந்து அவர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் 19 பேர் பலியாகினர்.
இதனை தொடர்ந்து 66 பேர் பாதுகாப்புடன் மீட்கப்பட்டனர். 2 பேர் இன்னும் மீட்கப்படவில்லை. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire