சிறை தண்டனை அனுபவித்து வரும் பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதி
ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஸ்லமாபாத்
அல் -அஸிஸியா இரும்பு ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக நவாஸ் ஷெரீப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து, அவரது மகள் மரியம் நவாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனது தந்தை நவாஸ் ஷெரீபின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அவர் தற்போது லாகூரிலுள்ள பஞ்சாப் இருதய நோய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைக் காண அந்த மருத்துவமனைக்குச் செல்ல நான் விரும்பினேன்.
ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு வர வேண்டாம் என்று எனது தந்தை மறுத்துவிட்டார்.அவரது உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கை எங்களுக்கு தரப்படவில்லை. இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகளிடமும், பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகத்திடமும் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்தப் பலனுமில்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story