அமெரிக்காவில் உள்ள வங்கியில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி
அமெரிக்காவில் உள்ள வங்கியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
மியாமி,
அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள மாகாணமான புளோரிடாவில் செப்ரிங் என்ற நகர் உள்ளது. இந்த நகரில் இயங்கி வரும் வங்கி ஒன்றிற்குள் புகுந்த 21-வயது இளைஞர் ஒருவர், திடீரென தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து, வங்கிக்குள் நின்ற மக்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார். இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞரை கைது செய்த போலீசார், இந்த கொலைக்கு எதுவும் பிண்ணனி காரணம் இருக்கிறதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில், துப்பாக்கி வன்முறை ஆண்டுக்கு ஆண்டு பெருகி வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் துப்பாக்கி வன்முறையால் 40 ஆயிரம் பேர் அமெரிக்காவில் பலியாகியுள்ளனர்.
Related Tags :
Next Story