ஹெல்மெட் அணியவில்லை என சீக்கியருக்கு அபராதம்: மன்னிப்பு கோரியது பாகிஸ்தான்


ஹெல்மெட் அணியவில்லை என சீக்கியருக்கு அபராதம்: மன்னிப்பு கோரியது பாகிஸ்தான்
x
தினத்தந்தி 24 Jan 2019 5:11 AM GMT (Updated: 24 Jan 2019 5:11 AM GMT)

ஹெல்மெட் அணியாததால் சீக்கிய இளைஞருக்கு அபராதம் விதித்த சம்பவத்துக்கு பாகிஸ்தான் மன்னிப்பு கோரியுள்ளது.

பெஷாவர், 

ஹெல்மெட் அணியாமல் சென்ற சீக்கிய இளைஞருக்கு அபராதம் விதித்ததற்காக சீக்கிய அமைப்பிடம் பாகிஸ்தான் அரசு மன்னிப்பு கோரியுள்ளது. பெஷாவர் நகரில் ஹெல்மெட் அணியாமல் சென்ற சீக்கிய இளைஞருக்கு அந்நாட்டு போக்குவரத்து காவலர் அபராதம் விதித்தார். இந்த விவகாரம், பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களாக உள்ள சீக்கிய சமூகத்தினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து,  மேற்கூறிய சம்பவத்துக்கு மன்னிப்பு கோரியுள்ள பாகிஸ்தான் போக்குவரத்து துறை, தவறுதலாக அபராதம் விதிக்கப்பட்டதாகவும், இந்த நிகழ்வுக்காக சீக்கிய சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஹெல்மெட் அணிவதில் இருந்து சீக்கிய சமூகத்தினருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Next Story