ஜப்பானில் கடும் பனிப்பொழிவு: தரையிறங்கிய போது சறுக்கிய டெல்லி விமானம் - 201 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
ஜப்பானில் கடும் பனிப்பொழிவு காரணமாக, தரையிறங்கிய போது டெல்லி விமானம் சறுக்கியதில் 201 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
டோக்கியோ,
ஜப்பானில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் விமான நிலையங்களின் ஓடுபாதையில் பனித்துகள்கள் குவிகின்றன.
இந்த நிலையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் டெல்லியில் இருந்து டோக்கியோவுக்கு புறப்பட்டு சென்றது. இதில் பயணிகள் 201 பேர் இருந்தனர்.
இந்த விமானம் டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையில் கொட்டி கிடந்த பனித்துகள்களில் சிக்கி சறுக்கியது. இதையடுத்து விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது.
இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தினார். உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதன் மூலம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஜப்பானில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் விமான நிலையங்களின் ஓடுபாதையில் பனித்துகள்கள் குவிகின்றன.
இந்த நிலையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் டெல்லியில் இருந்து டோக்கியோவுக்கு புறப்பட்டு சென்றது. இதில் பயணிகள் 201 பேர் இருந்தனர்.
இந்த விமானம் டோக்கியோ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையில் கொட்டி கிடந்த பனித்துகள்களில் சிக்கி சறுக்கியது. இதையடுத்து விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஓடியது.
இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை நிறுத்தினார். உடனடியாக பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதன் மூலம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Related Tags :
Next Story