ஆஸ்திரேலியாவில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம்: மீட்பு பணிகள் தீவிரம்


ஆஸ்திரேலியாவில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம்: மீட்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 4 Feb 2019 7:18 AM GMT (Updated: 4 Feb 2019 7:23 AM GMT)

ஆஸ்திரேலியாவில் கனமழையால் வரலாறு காணாத வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். தெருக்கள் முழுவதையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

டவுன்ஸ்வில், குயின்ஸ்லேண்ட் பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மழை அடுத்த ஐந்து தினங்களுக்கு தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மேலும் 20,000 வீடுகள் நீருக்குள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் மீட்பு பணிகள் நடக்கின்றன.

Next Story