நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டம்


நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டம்
x
தினத்தந்தி 5 Feb 2019 4:50 AM GMT (Updated: 5 Feb 2019 8:11 AM GMT)

நாடு கடத்தும் முடிவுக்கு எதிராக மேல் முறையீடு செய்ய விஜய் மல்லையா திட்டமிட்டுள்ளார்.

லண்டன்,


கிங் பி‌ஷர்’ குழும நிறுவனங்களின் தலைவர் விஜய் மல்லையா (62).  இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட அவர்  தற்போது லண்டனில் வசித்து வருகிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க இங்கிலாந்து உள்துறை அனுமதி வழங்கியுள்ளது.  
உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவை எதிர்த்து வரும் 14-ம் தேதிக்குள் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இது குறித்து விஜய்மல்லையா டுவிட்டரில் கூறுகையில், " கடந்த ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி வெஸ்ட் மின்ஸ்டர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக நான் மேல்முறையீடு  செய்ய இருப்பதாக கூறியிருந்தேன். உள்துறை செயலர் முடிவுக்கு முன்பாக மேல் முறையீடு நடவடிக்கைகளை நான் துவங்கவில்லை.  இப்போது மேல்முறையீடு செய்ய முடிவு செய்துவிட்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.

Next Story