பிரான்சில் கட்டிடத்தில் தீ விபத்து: 8 பேர் பலி; பெண் கைது
பிரான்ஸ் நாட்டில் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலியாகி உள்ளனர்.
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் 8 அடுக்கு கட்டிடம் ஒன்றின் 7வது மற்றும் 8வது தளங்களில் இன்று அதிகாலை தீப்பிடித்து கொண்டது. இந்த தீ விபத்தில் 8 பேர் பலியாகினர். ஒருவர் தீவிர காயமடைந்து உள்ளார்.
இதுபற்றிய தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 6 தீயணைப்பு வீரர்கள் உள்பட 30 பேர் காயமடைந்து உள்ளனர்.
200க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி 5 மணிநேரத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் பெண் ஒருவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story