உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம் ‘ஏர்பஸ்’ நிறுவனம் அறிவிப்பு


உலகின் மிகப்பெரிய விமான தயாரிப்பு நிறுத்தம் ‘ஏர்பஸ்’ நிறுவனம் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 Feb 2019 11:36 PM GMT (Updated: 14 Feb 2019 11:36 PM GMT)

உலகிலேயே மிகப்பெரிய விமானமான ‘சூப்பர்ஜம்போ ஏ380’ ரக விமானங்களை இந்நிறுவனம் தயாரித்து வந்தது.

துலூஸ், 

ஐரோப்பாவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் ‘ஏர்பஸ்’. உலகிலேயே மிகப்பெரிய விமானமான ‘சூப்பர்ஜம்போ ஏ380’ ரக விமானங்களை இந்நிறுவனம் தயாரித்து வந்தது.

500 பயணிகள் அமரும் வண்ணம், 2 அடுக்குகளை கொண்ட ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் கடந்த 2008-ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன.

இந்த நிலையில், ‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்கள் தயாரிப்பதை 2021-ம் ஆண்டு நிறுத்த உள்ளதாக ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

‘சூப்பர்ஜம்போ ஏ380’ விமானங்களை தயாரிக்க செலவு அதிகம் என்பதாலும், கடந்த சில ஆண்டுகளில் அதன் கொள்முதல் மிகவும் குறைந்துவிட்டதே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

Next Story