புல்வாமா தாக்குதல்: ஐநா நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியா அமைச்சர் வலியுறுத்தல்
புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை எடுக்க சவுதி அரேபியா அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
ஸ்ரீநகர்,
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா சபை நடவடிக்கை எடுக்க வேண்டுமென சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் அடல் அல் சுபீர் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், இது உண்மையென நிரூபிக்கப்பட்டால், அந்த அமைப்பின் மீது ஐநா சபை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story