சீனாவில் வெள்ளிச் சுரங்க விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி: 30 பேர் காயம்


சீனாவில் வெள்ளிச் சுரங்க விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி: 30 பேர் காயம்
x

சீனாவில் வெள்ளிச் சுரங்கத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 20 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாயினர். மேலும் 30 பேர் காயமடைந்தனர்.

பீஜிங்,

வடக்கு சீனாவில் மங்கோலியாவில் உட்புற பகுதியான மேற்கு உஜிம்கின் பன்னேரியில் தனியாருக்கு சொந்தமான வெள்ளிச் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன.

இதில் இன்மான் என்னும் நிறுவனத்தை சேர்ந்த ஒரு சுரங்கத்தில் வழக்கம்போல் இன்று தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சுரங்கத்துக்கு சுமார் 50 தொழிலாளர்களை ஏற்றி வந்த ஒரு பஸ் சுரங்கத்தின் அடிப்பகுதியில் செங்குத்தாக கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்சின் ‘பிரேக்’ செயலிழந்ததால், அது பயங்கரமாக பக்கவாட்டு சுவரில் மோதியது.

இந்த விபத்து காலை 8.30 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கி 20 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், சுமார் 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக, மீட்பு மற்றும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story