ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை: நவாஸ் ஷெரீப் ஜாமீன் மனு தள்ளுபடி


ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறை: நவாஸ் ஷெரீப் ஜாமீன் மனு தள்ளுபடி
x
தினத்தந்தி 25 Feb 2019 11:30 PM GMT (Updated: 25 Feb 2019 9:33 PM GMT)

பாகிஸ்தான் முன்னாள பிரதமர் நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத், 

சமீபத்தில் நவாஸ் ஷெரீப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறைக்குள்ளேயே மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

அதனை தொடர்ந்து, உடல்நிலையை காரணம் காட்டி நவாஸ் ஷெரீப்புக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து விட்டனர்.


Next Story