விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்ட தாய்...! விமானத்தை திருப்பிய விமானி...!


விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்ட தாய்...! விமானத்தை திருப்பிய விமானி...!
x
தினத்தந்தி 12 March 2019 11:10 AM GMT (Updated: 12 March 2019 11:10 AM GMT)

விமான நிலையத்தில் பெண் ஒருவர் குழந்தையை மறந்து விட்டதால், விமானத்தை விமானி திருப்பிய விநோதமான சம்பவம் நடைபெற்றுள்ளது.

வெளியே செல்லும் போது நம்முடைய உடைமைகளை மறந்து விடுவது வழக்கமானது. ஆனால் பெண் ஒருவர் விமான நிலையத்தில் குழந்தையை மறந்துவிட்டு விமானத்தில் ஏறிச்சென்ற அதிர்ச்சி மற்றும் விநோதமான சம்பவம் நடந்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாக்கில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சவுதி அரேபியா ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது. விமானம் புறப்பட்ட பின்னர் பெண் ஒருவர் அழுதுள்ளார். அப்போது என்னுடைய குழந்தையை விமான நிலையத்திலேயே மறந்து விட்டுவிட்டேன் என அழுதுள்ளார்.

உடனடியாக விமானி,  விமானத்தை விமான நிலையத்திற்கு திருப்ப கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதியை கோரியுள்ளார். அனுமதி அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக விமானி பேசும் 'கிளிப்' சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் நடந்த போது விமானம் வானில் பறக்க தொடங்கி விட்டதா? அல்லது ரன்வேயில் செல்லும் போது நடந்ததா? என்பது தெரியவில்லை. 

Next Story