உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 17 March 2019 10:30 PM GMT (Updated: 17 March 2019 7:22 PM GMT)

நியூசிலாந்தில் இருவேறு மசூதிகளில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.


* உள்நாட்டு போர் காரணமாக சிரியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக சென்ற 17 லட்சத்து 12 ஆயிரத்து 264 பேர் தாயகம் திரும்புவதற்கு விரும்புவதாகவும், அதற்கான தருணத்துக்காக காத்திருப்பதாகவும் ரஷிய ராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது.

* நியூசிலாந்தில் இருவேறு மசூதிகளில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர்கள் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதி இந்த தாக்குதலை நடத்துவதற்கு 9 நிமிடத்துக்கு முன்னர் தாக்குதல் தொடர்பாக அந்நாட்டு பிரதமர் உள்பட 3 பேருக்கு இ–மெயில் அனுப்பி உள்ளார்.

* ஆசிய நாடுகளில் வாணிபம் செய்ய சீன ராணுவத்துக்கு கூகுள் நிறுவனம் உதவி செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.

* ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மற்றும் கஜினி மாகாணங்களில் நடந்த 2 வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் மூத்த போலீஸ் அதிகாரி உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர்.

* இங்கிலாந்தில் வடக்கு இங்கிலாந்து, தெற்கு ஸ்காட்லாந்து ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் அங்கு பல்வேறு நகரங்கள் வெள்ளகாடாகி உள்ளன.


Next Story