அமெரிக்கா நோக்கி சென்ற போயிங் 787 விமானத்தில் விமானிகள் அறையிலிருந்து புகை


அமெரிக்கா நோக்கி சென்ற போயிங் 787 விமானத்தில் விமானிகள் அறையிலிருந்து புகை
x
தினத்தந்தி 25 March 2019 9:29 AM GMT (Updated: 25 March 2019 9:29 AM GMT)

அமெரிக்கா நோக்கி சென்ற போயிங் 787 விமானத்தில் விமானிகள் அறையிலிருந்து புகை வெளியானதால் உடனடியாக தரையிறக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரை நோக்கி புறப்பட்ட யுனைட்டேட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 787 விமானத்தில் திடீரென விமானிகள் அறையில் இருந்து புகை வெளியேறியுள்ளது. இதனையடுத்து விமானம் பிரஞ்சு பசிபிக் பிராந்தியமான நியூ கலேடோனியாவிற்கு திருப்பப்பட்டது. அங்கு கண்ட்ரோல் அறையின் அனுமதியை பெற்று உடனடியாக தரையிறங்கியது. 256 பயணிகளுடன் சென்ற விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எத்தியோபியாவில் போயிங்  737 மேக்ஸ் 8 விமானம் விபத்தில் சிக்கியது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக விசாரிக்கப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story