பெரு நாட்டில் பேருந்து தீப்பிடித்ததில் 20 பயணிகள் கருகி பலி
தினத்தந்தி 1 April 2019 9:08 AM GMT (Updated: 1 April 2019 9:08 AM GMT)
Text Sizeபெரு நாட்டில் பேருந்து ஒன்று தீப்பிடித்ததில் அதில் பயணித்த 20 பேர் உடல் கருகி பலியாகினர்.
பெரு நாட்டின் லிமா நகரில் இருந்து சிக்லேயோ நகர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகள் அதிகளவில் இருந்தனர்.
இந்த நிலையில் பேருந்தில் திடீரென புகை சூழ்ந்து, தொடர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த சம்பவத்தில் 20 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் வரை தீக்காயமடைந்தனர்.
பேருந்து தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் பற்றி எந்தவித தகவல்களும் இல்லை. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire