குளிக்கும் போது செல்போன் பயன்படுத்திய இளம் பெண் பலி


குளிக்கும் போது செல்போன் பயன்படுத்திய இளம் பெண் பலி
x
தினத்தந்தி 10 April 2019 10:51 AM GMT (Updated: 10 April 2019 10:51 AM GMT)

குளியல் தொட்டிக்குள் படுத்துக் கொண்டு செல்போன் பேசிய ஒரு அழகிய இளம்பெண் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

ரஷ்யாவைச் சேர்ந்த அந்த இளம்பெண் அனஸ்தேசியா (20)  குளிக்கச் சென்றிருக்கிறார்.பின்னர் வெகு நேரமாக பாத்ரூமிலிருந்து சத்தம் எதுவும் வராமல் போகவே, சந்தேகமடைந்த அனஸ்தேசியாவின் தாய் ஒக்சானா (48) மகளை சென்று பார்த்திருக்கிறார்.

அங்கு ஒரு கையில் சாக்கெட்டில் இணைக்கப்பட்ட மொபைல் போனுடனும், மறு கையில் குளியல் தொட்டிக்கான பிளக்குடனும் தொட்டிக்குள் சுய நினைவின்றி கிடந்திருக்கிறார் அனஸ்தேசியா.

அவர் மயங்கிக் கிடப்பதாக நினைத்து ஆம்புலன்சை அழைத்திருக்கிறார். விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர், அனஸ்தேசியா  ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் சமீபத்தில், குளிக்கும்போது போன் பேசி உயிரிழந்த ஐந்தாவது நபர் இவர் என்பது  குறிப்பிடத்தக்கது.

Next Story