தைவானில் அதிசயம் : இளம்பெண்ணின் கண்ணில் உயிருடன் 4 தேனீக்கள்
தைவானின் தெற்கு பிராந்தியத்தில் பிங்கித்துங் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஹீ (வயது 29). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உறவினரின் கல்லறையை சுத்தம் செய்வதற்காக சென்றிருந்தார்.
தைபே,
ஹீ அந்த வேலையை முடித்துவிட்டு அவர் வீட்டுக்கு திரும்பியது முதல், அவரது இடதுபுற கண்ணில் வீக்கம் மற்றும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.
டாக்டர்கள் அவரது கண்ணை பரிசோதித்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஹீயின் இடதுபுற கண்ணுக்குள் 4 தேனீக்கள் உயிருடன் இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ந்துபோயினர்.
பின்னர் டாக்டர்கள் தீவிர சிகிச்சையின் மூலம் அந்த பெண்ணின் கருவிழிக்கு எவ்வித பாதிப்புமின்றி தேனீக்களை வெளியே எடுத்தனர். தற்போது அவர் நலமாக உள்ளார்.
இந்த வகை தேனீக்கள் தேனை மட்டும் இன்றி, மனிதர்களின் வியர்வை மற்றும் கண்ணீர் துளிகளை உணவாக கொள்ளும் என கூறப்படுகிறது. எனவே அந்த பெண்ணின் கண்ணீரை குடிக்க வந்த தேனீக்கள் அவரது கண்ணுக்குள் சென்றிருக்கக்கூடும் என டாக்டர்கள் கூறினர்.
Related Tags :
Next Story