விதிகளை மீறி பட்டாசு வெடித்த இந்திய இளைஞருக்கு 3 வாரம் சிறை


விதிகளை மீறி பட்டாசு வெடித்த இந்திய இளைஞருக்கு 3 வாரம் சிறை
x
தினத்தந்தி 12 April 2019 6:36 AM GMT (Updated: 12 April 2019 7:38 AM GMT)

விதிகளை மீறி பட்டாசு வெடித்த இந்திய இளைஞருக்கு 3 வார கால சிறை தண்டனை அளித்து சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த ஜீவன் அர்ஜூன் என்ற 29 வயது இளைஞர், கண்தெரியாத தனது மாமியாருடன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று, நள்ளிரவு 3 மணியளவில் வீட்டுமுன் பட்டாசுகளை வெடித்துள்ளார்.

சுமார் 5 நிமிடம் பயங்கர சத்தத்துடன் நடந்த இந்த வாணவேடிக்கை அக்கம் பக்கத்தினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த சிங்கப்பூர் நீதிமன்ற மாவட்ட நீதிபதி மார்வின் பே, குடியிருப்பு நிறைந்த பகுதிகளில் பட்டாசு வெடித்ததால், இந்தியாவை சேர்ந்த ஜீவன் அர்ஜூனுக்கு,  3 வார கால சிறை தண்டனை மற்றும் இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Next Story