உலகைச்சுற்றி...


உலகைச்சுற்றி...
x
தினத்தந்தி 12 April 2019 11:00 PM GMT (Updated: 12 April 2019 5:11 PM GMT)

* சிரியாவின் குவெய்னிடெரா மாகாணத்தில் குர்ரெம் நகரில் கண்ணிவெடி வெடித்து சிதறியதில் 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

* சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் திடீரென கொட்டித்தீர்த்த பேய் மழையால் அங்குள்ள ஷென்ஜென் நகரம் வெள்ளக்காடாகி உள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7 பேர் உயிர் இழந்துள்ளனர். 4 பேர் மாயமாகி இருக்கிறார்கள். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. 

* விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே 7 ஆண்டுகளுக்கு பின் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது நெருங்கிய கூட்டாளி ஒருவர் ஈக்குவடாரில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஜப்பானுக்கு தப்பி செல்ல முயன்றபோது போலீசாரிடம் பிடிப்பட்டார். 

* ஆப்கானிஸ்தானின் பாக்டியா மாகாணத்தில் ஹக்கானி வலைக்குழு பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


Next Story