பாகிஸ்தானில் மழை மற்றும் வெள்ளம்; 7 பேர் பலி


பாகிஸ்தானில் மழை மற்றும் வெள்ளம்; 7 பேர் பலி
x
தினத்தந்தி 15 April 2019 10:28 AM GMT (Updated: 15 April 2019 10:28 AM GMT)

பாகிஸ்தானில் மழை மற்றும் வெள்ளம் தொடர்புடைய சம்பவங்களில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.

பெஷாவர்,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் சித்ரால் மாவட்டத்தில் டேனின் கிராமத்தில் பெய்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டது.  இதனால் மலை பகுதியில் இருந்து பெரிய அளவிலான கற்கள் மற்றும் கழிவுகள் உருண்டோடி வந்து வீடு ஒன்றின் மீது விழுந்தன.  இதில் அந்த வீட்டில் இருந்த பெண் உள்பட 3 பேரும் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், பன்னர் மாவட்டத்தில் மலை பகுதியில் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று திரும்பும்பொழுது திடீரென மலையிடுக்குக்குள் விழுந்து விபத்திற்குள்ளானது.  இதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.

வடக்கு பாகிஸ்தானில் உள்ள மலை பிரதேசங்களில் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.  இங்கு பல நகரங்களில் ஏற்பட்ட தொடர் மழை மற்றும் பனிப்பொழிவால் நிலச்சரிவுகளும் மற்றும் வெள்ள பெருக்கும் ஏற்பட்டு உள்ளது.  இதனால் அங்குள்ள பொதுமக்கள் பெரிதும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.

Next Story