இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு


இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 207 ஆக உயர்வு
x
தினத்தந்தி 21 April 2019 12:34 PM GMT (Updated: 21 April 2019 12:34 PM GMT)

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது.



இலங்கை தலைநகர் கொழும்புவில் காலை கொச்சிக்கடை அந்தோணியார் தேவாலயம், நீர் கொடும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு தேவாலயம், கிங்ஸ்பெரி, ஷாங்கிரி லா, சின்னமன் கிராண்ட் உள்ளிட்ட நட்சத்திர ஓட்டல்கள் என 6 இடங்களில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. மாலையும் இரண்டு இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டு செல்கிறது. 207 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 400-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே இச்சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story