இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு: “இந்தியர்களுக்கு உதவ தூதரகம் தயார்”


இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு: “இந்தியர்களுக்கு உதவ தூதரகம் தயார்”
x
தினத்தந்தி 21 April 2019 7:50 PM GMT (Updated: 21 April 2019 7:50 PM GMT)

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக, இந்தியர்களுக்கு உதவ தூதரகம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து அங்குள்ள இந்தியர்களுக்கு உதவ இந்திய தூதரகம் முன்வந்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து நாங்கள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். உதவியோ அல்லது விளக்கமோ தேவைப்படும் இந்திய குடிமக்கள், எங்கள் உதவி மைய எண்களான 94777903082, 94112422788, 94112422789 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.


Next Story