இலங்கையில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு : போலீஸ் விசாரணை தீவிரம்


இலங்கையில் 87 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிப்பு : போலீஸ் விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 22 April 2019 12:15 PM GMT (Updated: 22 April 2019 12:15 PM GMT)

இலங்கையில் கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்புவில் நேற்று தொடர் வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதை அடுத்து பாதுகாப்பு படை உஷார் படுத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சோதனை மற்றும் கைது நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதுவரையில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே கொழும்பு பேருந்து நிலையத்தில் 87 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

வழிபாட்டு இடங்களில் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்ய பயன்படுத்தப்படும் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மேலும் நிலையை பதற்றம் அடைய செய்துள்ளது. டெட்டனேட்டர்கள் சிக்கியது தொடர்பாக பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story