கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என தகவல்


கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என தகவல்
x
தினத்தந்தி 23 April 2019 10:26 AM GMT (Updated: 23 April 2019 10:26 AM GMT)

இலங்கையின் கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு அச்சத்திலிருந்து மக்கள் வெளிவராத நிலையே தொடர்கிறது. இலங்கை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்து 350க்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உயிரிழந்தவர்களில் 45 பேர் குழந்தைகள் என்று யுனிசெப் கூறியுள்ளது. இந்நிலையில் கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி, வேன் நுழைந்துள்ளது என புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொழும்பு நகரம் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வாகனச் சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story