பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கல் -நாசா தகவல்


பூமிக்கு நெருக்கமாக வரும் விண்கல் -நாசா தகவல்
x
தினத்தந்தி 4 May 2019 10:32 AM GMT (Updated: 4 May 2019 10:32 AM GMT)

2029-ம் ஆண்டில் பூமிக்கு நெருக்கமாக ஒரு விண்கல் வரும் என நாசா தகவல் வெளியிட்டு உள்ளது.

பூமிக்கு அருகே 2029-ம் ஆண்டில் ஒரு விண்கல் வருவதாக நாசா கூறியுள்ளது. அந்த கல்லுக்கு நாசா அபோபிஸ் என பெயர் சூட்டி உள்ளது. எகிப்தின் கடவுளான அபோபிஸ் பெயர் அதற்கு சூட்டப்பட்டு உள்ளது. அந்த விண்கல் 340 மீட்டர் நீளம் உடையதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் வரும் 2029-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி மாலை நேரத்தில் பூமியை நெருக்கமாக கடந்து செல்ல  வாய்ப்பிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு கடந்து செல்லும்போது, பூமிக்கும் விண்கல்லுக்குமான தொலைவு 31 ஆயிரம் கிலோ மீட்டர்களாக இருக்கும் என்றும் நாசா விஞ்ஞானிகள்  கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதி மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதியில் இதனைக் காணலாம் என்று குறிப்பிட்டுள்ள விஞ்ஞானிகள், இதனால் பூமிக்கு ஆபத்தில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Next Story