ஐ.எஸ். தெற்கு ஆசிய கிளைக்கு ஐ.நா. தடை


ஐ.எஸ். தெற்கு ஆசிய கிளைக்கு ஐ.நா. தடை
x
தினத்தந்தி 15 May 2019 8:45 PM GMT (Updated: 15 May 2019 4:25 PM GMT)

ஐ.எஸ்.ஐ.எல்.–கே என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது.

நியூயார்க், 

ஐ.எஸ்.ஐ.எல்.–கே என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்தது. இந்த இயக்கம், ஐ.எஸ். இயக்கத்தின் தெற்கு ஆசிய கிளை என்று அழைக்கப்படுகிறது. கடந்த 2015–ம் ஆண்டு, பாகிஸ்தானை சேர்ந்த தெரிக் இ தலீபான் இயக்கத்தின் முன்னாள் தளபதியால் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்த அமைப்பு நடத்திய பயங்கரவாத தாக்குதல்களில் 150 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story