உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 15 May 2019 7:42 PM GMT (Updated: 15 May 2019 7:42 PM GMT)

* மியான்மரின் சகாயிங் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் கடுமையான சூறாவளி தாக்கியது. இதில் சுமார் 800 வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.

* ஈரான்-அமெரிக்கா இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அந்நாட்டுடன் போரிட விரும்பவில்லை என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். ஈரான் சாதாரண நாடு போல நடந்துகொள்வதையே அமெரிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

* ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் ஏர்பில் நகரில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அமெரிக்காவுக்கு திரும்பும் படி அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

* அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள கெட்சிகன் நகரில் 2 குட்டி விமானங்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

* ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள அமாமி உஷிமா தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.

Next Story