அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 52 பேர் நாடு கடத்தல்
அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தானியர்கள் 52 பேர் நாடு கடத்தப்பட்டனர்.
அமெரிக்காவில் விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கி இருக்கும் பிற நாடுகளை சேர்ந்தவர்களை கைது செய்து, நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுபோன்று விசா காலம் முடிந்த பிறகும் தங்கி இருந்தவர்கள், குற்றவழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் என பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 53 பேரை நாடு கடத்த அமெரிக்க குடியுரிமைத்துறை நடவடிக்கை மேற்கொண்டது. 53 பேரை பாகிஸ்தானுக்கு அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்ட நிலையில் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தவிர மற்ற 52 பேரும் பலத்த பாதுகாப்புடன் தனிவிமானத்தில் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனர்.
Related Tags :
Next Story