ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு


ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிப்பு
x
தினத்தந்தி 19 May 2019 10:45 PM GMT (Updated: 19 May 2019 8:35 PM GMT)

ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம் அழிக்கப்பட்டது.

பாக்தாத்,

ஈராக் நாட்டில் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்து 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முற்றிலுமாய் அழிக்கப்படவில்லை. அவர்கள் ஆங்காங்கே பதுங்கி இருந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அங்குள்ள அன்பார் மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கவும், வெடிபொருட்கள் பதுக்கி வைக்கவும் ஒரு இடம், முகாமாக செயல்பட்டு வந்தது ராணுவத்துக்கு தெரிய வந்தது.

இதையடுத்து ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது. இதை ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்தது.

Next Story