எல்லைக்குள் பறந்த ரஷ்ய குண்டு வீசும் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா


எல்லைக்குள் பறந்த ரஷ்ய குண்டு வீசும் விமானங்களை இடைமறித்த அமெரிக்கா
x
தினத்தந்தி 22 May 2019 6:03 AM GMT (Updated: 22 May 2019 6:03 AM GMT)

ரஷ்யாவின் போர் விமானங்களை அலாஸ்கா அருகே இடைமறித்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.

கடந்த திங்கள்கிழமை அன்று அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண  வான்பரப்புக்கு அருகே ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் பறந்ததாக  அமெரிக்காவின் வடக்கு வான் பாதுகாப்பு கட்டளையகம் தெரிவித்துள்ளது. அந்த 6 போர் விமானங்களில், குண்டு வீசும் திறன் கொண்ட டியூ-95 மற்றும் சுகோய் 35 ரக போர் விமானங்களும் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

அவற்றை, தங்கள் நாட்டின் எப்-22 விமானங்கள் மூலம் இடைமறித்து திருப்பி அனுப்பியதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. அச்சுறுத்தலை கண்டுபிடிக்கவும் முறியடிக்கவும் 365 நாட்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. 

Next Story