எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய இங்கிலாந்து நாட்டுக்காரர் சாவு
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ராபின் ஹய்நெஸ் பிஷர் (வயது 44) என்பவர் உள்பட 6 பேர் குழுவினர் இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்கள்.
காத்மாண்டு,
ராபின் ஹய்நெஸ் பிஷர் 8,600 மீட்டர் உயரத்தில் இருந்தபோது அவருக்கு திடீரென நேற்று காலை 8.30 மணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதில் அவர் சிறிது நேரத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த வசந்த காலத்தில் இதுவரை 8 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள பல்வேறு மலைகளில் ஏறும்போது பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. இதில் எவரெஸ்ட் சிகரத்தில் மட்டும் 10 பேர் பலியாகி உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire