இலங்கை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு ரனில் விக்ரமசிங்கே வரவேற்பு


இலங்கை விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு ரனில் விக்ரமசிங்கே வரவேற்பு
x
தினத்தந்தி 9 Jun 2019 6:28 AM GMT (Updated: 9 Jun 2019 6:28 AM GMT)

இலங்கை சென்ற பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வரவேற்றார்.

கொழும்பு,

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30ந்தேதி பதவி ஏற்றது.  2வது முறையாக பிரதமர் பதவியை ஏற்ற மோடி தனது முதலாவது வெளிநாட்டு பயணத்தை அண்டை நாடான மாலத்தீவுக்கு மேற்கொண்டார்.

தொடர்ந்து இலங்கைக்கு இன்று அவர் பயணம் மேற்கொள்கிறார்.  தனது மாலத்தீவு பயணத்திற்கு முன் பிரதமர் மோடி வெளியிட்ட செய்தியில், மாலத்தீவு மற்றும் இலங்கைக்கு மேற்கொள்ளும் பயணம், அந்த நாடுகளுடனான இந்தியாவின் நல்லுறவை மேம்படுத்திக்கொள்ள உதவும் என நம்புகிறேன் என குறிப்பிட்டு இருந்தார்.  

இதன்படி, மோடி நேற்று மாலத்தீவு சென்றார். அங்கு அவருக்கு மாலத்தீவு அரசின் உயரிய விருதை அந்த நாட்டின் அதிபர் வழங்கினார்.  இதனை அடுத்து, மாலத்தீவு பயணம் நிறைவடைந்து அங்கிருந்து புறப்பட்ட பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு சென்றார்.  அவரை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே முறைப்படி வரவேற்றார்.

Next Story