இஸ்ரேலில் இந்தியர் குத்திக்கொலை


இஸ்ரேலில் இந்தியர் குத்திக்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 7:50 PM GMT)

இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் நேவே ஷா அனன் என்ற இடத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஜெரோம் ஆர்தர் பிலிப் (வயது 50). இந்தியரான இவர், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்.

டெல் அவிவ், 

ஜெரோம் ஆர்தர் பிலிப்புடன் கேரளாவை சேர்ந்த பீட்டர் சேவியர் (60) என்பவர் உள்பட மேலும் சில இந்தியர்கள் ஒரே வீட்டில் தங்கி இருந்தனர். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் இரவு ஜெரோம் ஆர்தர் பிலிப்புக்கும், அவருடன் தங்கி இருந்தவர்களுக்கும் இடையே திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த 2 பேர் ஜெரோம் ஆர்தர் பிலிப்பை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதனை தடுக்க வந்த பீட்டர் சேவியருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் ஜெரோம் ஆர்தர் பிலிப் பரிதாபமாக இறந்தார். பீட்டர் சேவியர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முன்னதாக, கத்தியால் குத்திய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

Next Story