ஆப்கானிஸ்தானில் 40 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது.
காபூல்,
நாடு முழுவதிலும் தலீபான்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி, பயங்கரவாதிகளை கொன்று குவித்து வருகிறது. அதே போல் பயங்கரவாதிகளும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் சாபூல் மாகாணத்தில் டே சோபான் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களின் சோதனை சாவடி மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதனை தொடர்ந்து, பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.
இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் தலீபான் இயக்கத்தின் தளபதி உள்பட பயங்கரவாதிகள் 40 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story