மோடியும், இம்ரான்கானும் நலம் விசாரித்தனர்
கிர்கிஸ்தான் நாட்டில் பிஷ்கேக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
பிஷ்கேக்,
பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் தனிப்பட்ட சந்திப்பு இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் நேற்று மாநாட்டில் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றபோது பிரதமர் மோடியும், இம்ரான்கானும் நேருக்கு நேர் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி, இம்ரான்கானிடம் நலம் விசாரித்தார். பதிலுக்கு மோடியிடம் நலம் விசாரித்த இம்ரான்கான், தேர்தலில் வெற்றிபெற்றதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.
Related Tags :
Next Story